ஒரு சந்தோஷப்பகிர்வு
நண்பர்களே,
ஒரு மகிழ்வான செய்தியை, சக குடும்ப உறுப்பினர்களிடம்
பகிர்ந்துகொள்வதான மனப்பாங்கோடு உங்களோடு
பகிர்ந்துகொள்கிறேன்.
சிங்கப்பூரின் நிரந்தரவாசத்தகுதி என்றழைக்கப்படும் Permanent Residentship
இன்று எனக்கு கிடைத்துள்ளது.
திருமணம் முடித்து,மனைவியை 3 மாத சுற்றுலா விசாவில் இங்கு அழைத்துவந்து
பிறகு,ஏர்போர்ட்டில் கண்ணீர் மல்க வழியனுப்பும் துர்பாக்கியத்திலிருந்து
ஒருவழியாக தப்பித்துவிட்டேன்.
இனி,வேறு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்வதில்,எந்தச்சிக்கலும் இல்லையென்பதால்,
இத்தனை காலம் நான் பயந்து மரியாதை செலுத்திக்கொண்டிருந்த, என் தற்போதைய முதலாளிக்கு
சற்று மரியாதையைக் குறைத்துக்கொண்டு,லேசாக நெஞ்சை நிமிர்த்தித்திரியலாம்.
இப்படி,இன்னும் பல சலுகைகள் உள்ளன இந்த PR க்குள்.
வீரமணி இளங்கோ