இனிய வலைப்பூ நண்பர்களே

2004ல் வலைப்பதிவு தொடங்கி, வேறொரு நிறுவனத்திற்கு மாறியதன் விளைவாய் ஏற்பட்ட வேலைப்பளுவினாலும்,
திருமணத்திற்கு பிந்திய தலைகீழாய் வாழ்க்கைமுறையாலும்,
இன்னும் பிற அதானாலும்,இதானாலும்

மிக நீண்ட.......தொரு இடைவெளிக்குப்பின் மீண்டும் என் வலைப்பதிவை திறந்தேன்.

என் வலைப்பூ தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது.
தமிழ்மணம் முற்றிலும் வேறுபட்டிருந்தது.
நூற்றுக்கணக்கிலிருந்த வலைப்பூக்கள் ஆயிரங்களாயிருந்தன.
வேறுபல வலைப்பூத்திரட்டிகளின் உதயம்.
பல்வேறுவகையான புதிய வலைப்பூ தொழிற்நுட்ப சங்கதிகள்இன்னும் எனக்கு பிடிபடவேயில்லை.

இப்படியாய்...
ஆயுள் தண்டனைக்குப் பின் வெளியேவந்த ஒரு கைதியைப்போலஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறேன்.

என் வலைப்பூ நண்பர்கள் நூற்றுக்கணக்கான பதிவுகளைத்தாண்டியிருக்கிறார்கள்.மிகுந்த மகிழ்ச்சி.

8 ஆண்டுகள் சிங்கப்பூரில் பணி.தற்போது நான்கு மாதங்களாய் பெங்களூரில்..

நன்றி,இனி அடிக்கடி சந்திப்போம்.

3 Comments:

Anonymous Anonymous said...

Welcome back.

Rumya

November 28, 2007 at 1:52 AM  

Anonymous Anonymous said...

Welcome back.

Rumya

November 28, 2007 at 1:52 AM  

Blogger Baby Pavan said...

வாங்க வாங்க வாழ்த்துக்கள்

November 28, 2007 at 10:03 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home