விடுமுறை விஜயத்தில்





ஒப்பீடு

வெளிநாட்லயா இருக்கீங்க?
கேள்விக்குப் பதில்சொல்லி முடிக்கும்முன்
அவர்களுக்குத் தெரிந்த
யாரோ ஒருவரும்கூடவெளிநாட்டில்தான்
இருப்பதாகச் சொன்னார்கள்

என்னா சம்பளம்?
வாங்குவதைச் சொன்னபோதும்
சற்று அதிகப்படுத்திச் சொன்னபோதும்
அவர்களுக்குத் தெரிந்த
அந்த யாரோ ஒருவர்
என்னைவிட அதிகமாய் சம்பாதிப்பதாய்ச் சொன்னார்கள்

எத்தனை வருசமாச்சு?
ஐந்து வருடமென்றபோது
அவர் போயி ஏழெட்டு வருசமிருக்குமில்ல?
என பக்கத்திலிருப்பவரை விசாரித்துக்கொண்டார்கள்.

முஸ்தபாவில் வாங்கிய
ஹீரோ பேனாவை நீட்டியபோது
தன் வீட்டுத்தொலைக்காட்சிப்பெட்டியின்
மேலிருக்கிறவொன்றையோ

அலமாரியைத் துழாவி எடுத்துவந்த
ஏதோவொரு விலையுயர்ந்த பொருளையோகாட்டி
அந்த மேற்படி நபர் வாங்கிவந்ததாகச் சொன்னார்கள்

இப்படியாக...

நான் சென்றுவந்த எல்லா சொந்தக்காரர்வீடுகளிலும்
அவரவர்களுக்குத் தெரிந்த
அந்த வெளிநாட்டில் வாழும் நபர்கள்
என்னைச்சிறுமைப்படுத்திக் கொண்டேதான்இருக்கிறார்கள்!


வீரமணி இளங்கோவன்

3 Comments:

Blogger Chandravathanaa said...

nalla karuththana kavithai

October 28, 2004 at 9:29 AM  

Blogger பினாத்தல் சுரேஷ் said...

Nalla Kavithai -- I can identify myself in.

October 28, 2004 at 1:41 PM  

Blogger தங்ஸ் said...

சூப்பர்

December 24, 2004 at 1:16 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home