என்னவளின் நினைவால்....




அவள்

நிமிர்த்த முடியாத
நாய்வாலைப் போல

விலக்கினாலும்
திரும்பத்திரும்ப
அவளையே சுற்றுகின்றன
நினைவலைகள்!

பள்ளம் நோக்கிப்பாய்கின்ற
ஒரு நதியைப்போல
அவளை நோக்கியே பாய்கின்றன
எண்ணங்கள்!

பள்ளிவிட்டதும்
ஓடிவந்து அம்மாவைத் தழுவிக்கொள்கிற
ஒரு குழந்தையைப்போல
அவளையே போய்த்தழுவிக்கொள்கின்றன
ஞாபகங்கள்!

நில்லாது சுற்றுகின்ற
ஒரு கடிகாரமுள்ளைப்போல
இடைவிடாது அவளையேநினைத்துக்கிடக்கிறது
நெஞ்சு!

பூ
வாசனையைச் சுமந்துக்கொண்டிருப்பதைப்போல
மனம்
அவள் நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறது!


சுடுமணலாய்க் கிடக்கிறேன்
நான்!

மழைத்துளியாய்ச் சொட்டுகிறது
அவள் நினைவுகள்!

வீரமணி இளங்கோவன்
சிங்கப்பூர்
veeramanielango@hotmail.com

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home